Sunday 24 February 2008

நம்பிக்கை தத்துவங்கள் 2

வலையில் கண்டது:
நன்றி: முத்தமிழ் மன்றம்

சோம்பலை சாம்பலாக்கி வேதனையை சாதனையாக்குவோம்
-----------------------------------------------------------------------------------

உனக்குள்ளே உந்தன் பயத்தை பதுக்கிக்கொண்டு,
தைரியத்தை மட்டுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-----------------------------------------------------------------------------------

தேடும் வரை வாழ்க்கை நிஜம்;
ஓடும் வரை வெற்றி நிஜம்.
-----------------------------------------------------------------------------------

தட்டிப் பறிப்பவன் வாழ்ந்ததில்லை;
விட்டுக் கொடுப்பவன் வீழ்ந்ததில்லை.
-----------------------------------------------------------------------------------

செல்லும் பாதை சரியான பாதையாக இல்லாத பொழுது,
வேகமாக ஓடுவதால் என்ன பலன்?
-----------------------------------------------------------------------------------

வெற்றி என்பது தோல்விகளின் தொகுப்பு.
-----------------------------------------------------------------------------------

இறந்தகால அனுபவங்கள் நிகழ்கால சாதனைகள்.
-----------------------------------------------------------------------------------

கசப்புகளின்றி சாகசம் இல்லை.
-----------------------------------------------------------------------------------

நெருப்புக்கு ஓய்வென்பது அணைவதல்ல, எரிப்பது!
உனக்கு ஓய்வென்பது உறங்குவதல்ல, உழைப்பது!
-----------------------------------------------------------------------------------

கடந்து செல்கிறது நமக்கான வினாடிகள்
நீ கழிக்கப்படுவதற்குள் விழித்துக்கொள்.
-----------------------------------------------------------------------------------

இறந்துபோன ஒன்றுக்கும் உயிரிருக்கிறதென்றால் அது காலத்திற்கு மட்டுமே.
-----------------------------------------------------------------------------------

பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதம் இல்லை.
-----------------------------------------------------------------------------------

வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால்
மீன்களின் எண்ணிக்கைக் குறைந்து போவதில்லை.
-----------------------------------------------------------------------------------

புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால்
ஒவ்வொரு மனிதனின் இதயமும் கல்லறைதான்.
-----------------------------------------------------------------------------------

தன் மீது விழும் மண்ணைச்
சுமையென நினைப்பதில்லை விதை.
-----------------------------------------------------------------------------------

காயங்களுக்கு மருந்து வேண்டாம்,
கனிவான பார்வை போதும்.
-----------------------------------------------------------------------------------

எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்,
ஏமாற்றத்தால் சோர்வடைய மாட்டாய்.
-----------------------------------------------------------------------------------

படைப்பாளனாய் வேண்டாம்,
நல்ல விமர்சகனாய் இரு.
-----------------------------------------------------------------------------------

வீட்டுக்குள் நடப்பதை வீதிக்கு எடுத்துச் செல்லாதே,
வீதியில் பாதித்தவற்றை வீட்டுக்குக் கொண்டுவா.
-----------------------------------------------------------------------------------

மனிதனாய் இரு மகானாய் வேண்டாம்.
-----------------------------------------------------------------------------------

உன் மீது அன்பானவர்கள்
உன்னை பலமுறை சிரிப்பவைப்பவர்கள் அல்ல.
உன் ஒவ்வொரு அழுகைக்குபின்னும் சிரிக்கவைப்பவர்களே!
-----------------------------------------------------------------------------------

அதிகமாக சிரிக்கும் மனிதனும்
தன் மனதில்
மிகப்பெரிய காயத்தை வைத்திருப்பான். - சார்லி சாப்லின்

எனவே மனதில் எவ்வளவு காயமிருந்தாலும்
எல்லோரிடமும் சிரித்து பழகுங்கள்.
-----------------------------------------------------------------------------------

கோபம் என்பது அடுத்தவர் செய்யும் தவறுக்கு,
உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை.
-----------------------------------------------------------------------------------

வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல..
அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும்,
தன்னம்பிக்கைக்குமே சொந்தம். - ஹிட்லர்
-----------------------------------------------------------------------------------

எளிய வாழ்க்கையும்,
உயர்ந்த எண்ணமும் வாழ்வின் லட்சியமாக இருக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------

உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளமே அடக்கம்தான்.
-----------------------------------------------------------------------------------

அறிவு வளர வளர நம் அறியாமையின் அளவை அறிய முடிகிறது.
-----------------------------------------------------------------------------------

அன்பும், ஆற்றலும் இணைந்து பணியாற்றும் போது
தலைசிறந்த படைப்பை எதிர்பார்க்கலாம்.
-----------------------------------------------------------------------------------

வாழ்க்கையில் முன்னேறும் போதுதான்
நம் திறமையின் அளவுகளை அறிய முடிகிறது.
-----------------------------------------------------------------------------------

நேர்மையான குறிக்கோள், அளவற்ற ஊக்கம்,
தளர்வற்ற நெஞ்சுறுதி, சலியாத உழைப்பு
இவைகளே வெற்றிக்கு வழிகள்.
-----------------------------------------------------------------------------------

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால்
ஏமாற்றங்கள் அதிகமாக இருக்காது!
-----------------------------------------------------------------------------------

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது...
பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது!
-----------------------------------------------------------------------------------

வெற்றி என்பது நாம் பெற்றுக் கொள்வது,
தோல்வி என்பது நாம் கற்றுக் கொள்வது!
-----------------------------------------------------------------------------------

செயல்கள் எதுவும் நல்லது அல்லது கெட்டது என்று இல்லை .
அதன் அடிப்படையான ஆசை தான் அதை நிர்ணயிக்கிறது.
ஒரு பெரிய தளபதி கூட தோற்க கூடும் .
பாமரன் விவசாயியின் வைராக்கியம் தோற்காது.
-----------------------------------------------------------------------------------

வாழ்வு காலத்தில் நன்மையை செய்...
தாழ்வு காலத்தில் சிந்தனையை செய்!
-----------------------------------------------------------------------------------

நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னைத் தேடிவரும்.
-----------------------------------------------------------------------------------

நல்ல நண்பனை அடைய விரும்பினால்
நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------

செல்வங்களை விட செல்வாக்கு மேலானது.
-----------------------------------------------------------------------------------

கண்ணாடி வீட்டில் வசிப்பவன்,
அண்டை வீட்டார் மேல் கல் எறியக் கூடாது.
-----------------------------------------------------------------------------------

தொடக்கத்தைவிட முடிவைப் பற்றி அதிகமாக சிந்தனை செய்.
-----------------------------------------------------------------------------------

ஒரு மனிதனின் அழகு அவன் நாவின் இனிமையில் இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------

No comments: