வலையில் கண்டது:
நன்றி: முத்தமிழ் மன்றம்
சோம்பலை சாம்பலாக்கி வேதனையை சாதனையாக்குவோம்
-----------------------------------------------------------------------------------
உனக்குள்ளே உந்தன் பயத்தை பதுக்கிக்கொண்டு, 
தைரியத்தை மட்டுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-----------------------------------------------------------------------------------
தேடும் வரை வாழ்க்கை நிஜம்; 
ஓடும் வரை வெற்றி நிஜம்.
-----------------------------------------------------------------------------------
தட்டிப் பறிப்பவன் வாழ்ந்ததில்லை; 
விட்டுக் கொடுப்பவன் வீழ்ந்ததில்லை.
-----------------------------------------------------------------------------------
செல்லும் பாதை சரியான பாதையாக இல்லாத பொழுது, 
வேகமாக ஓடுவதால் என்ன பலன்?
-----------------------------------------------------------------------------------
வெற்றி என்பது தோல்விகளின் தொகுப்பு. 
-----------------------------------------------------------------------------------
இறந்தகால அனுபவங்கள் நிகழ்கால சாதனைகள். 
-----------------------------------------------------------------------------------
கசப்புகளின்றி சாகசம் இல்லை. 
-----------------------------------------------------------------------------------
நெருப்புக்கு ஓய்வென்பது அணைவதல்ல, எரிப்பது!
உனக்கு ஓய்வென்பது உறங்குவதல்ல, உழைப்பது! 
-----------------------------------------------------------------------------------
கடந்து செல்கிறது நமக்கான வினாடிகள் 
நீ கழிக்கப்படுவதற்குள் விழித்துக்கொள். 
-----------------------------------------------------------------------------------
இறந்துபோன ஒன்றுக்கும் உயிரிருக்கிறதென்றால் அது காலத்திற்கு மட்டுமே. 
-----------------------------------------------------------------------------------
பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதம் இல்லை. 
-----------------------------------------------------------------------------------
வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால் 
மீன்களின் எண்ணிக்கைக் குறைந்து போவதில்லை. 
-----------------------------------------------------------------------------------
புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால் 
ஒவ்வொரு மனிதனின் இதயமும் கல்லறைதான். 
-----------------------------------------------------------------------------------
தன் மீது விழும் மண்ணைச் 
சுமையென நினைப்பதில்லை விதை. 
-----------------------------------------------------------------------------------
காயங்களுக்கு மருந்து வேண்டாம், 
கனிவான பார்வை போதும். 
-----------------------------------------------------------------------------------
எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள், 
ஏமாற்றத்தால் சோர்வடைய மாட்டாய். 
-----------------------------------------------------------------------------------
படைப்பாளனாய் வேண்டாம், 
நல்ல விமர்சகனாய் இரு. 
-----------------------------------------------------------------------------------
வீட்டுக்குள் நடப்பதை வீதிக்கு எடுத்துச் செல்லாதே, 
வீதியில் பாதித்தவற்றை வீட்டுக்குக் கொண்டுவா. 
-----------------------------------------------------------------------------------
மனிதனாய் இரு மகானாய் வேண்டாம். 
-----------------------------------------------------------------------------------
உன் மீது அன்பானவர்கள் 
உன்னை பலமுறை சிரிப்பவைப்பவர்கள் அல்ல. 
உன் ஒவ்வொரு அழுகைக்குபின்னும் சிரிக்கவைப்பவர்களே! 
-----------------------------------------------------------------------------------
அதிகமாக சிரிக்கும் மனிதனும் 
தன் மனதில் 
மிகப்பெரிய காயத்தை வைத்திருப்பான். - சார்லி சாப்லின் 
எனவே மனதில் எவ்வளவு காயமிருந்தாலும் 
எல்லோரிடமும் சிரித்து பழகுங்கள்.
-----------------------------------------------------------------------------------
கோபம் என்பது அடுத்தவர் செய்யும் தவறுக்கு, 
உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை.
-----------------------------------------------------------------------------------
வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல.. 
அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும், 
தன்னம்பிக்கைக்குமே சொந்தம். - ஹிட்லர்
-----------------------------------------------------------------------------------
எளிய வாழ்க்கையும்,
உயர்ந்த எண்ணமும் வாழ்வின் லட்சியமாக இருக்க வேண்டும். 
-----------------------------------------------------------------------------------
உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளமே அடக்கம்தான். 
-----------------------------------------------------------------------------------
அறிவு வளர வளர நம் அறியாமையின் அளவை அறிய முடிகிறது. 
-----------------------------------------------------------------------------------
அன்பும், ஆற்றலும் இணைந்து பணியாற்றும் போது
தலைசிறந்த படைப்பை எதிர்பார்க்கலாம். 
-----------------------------------------------------------------------------------
வாழ்க்கையில் முன்னேறும் போதுதான் 
நம் திறமையின் அளவுகளை அறிய முடிகிறது. 
-----------------------------------------------------------------------------------
நேர்மையான குறிக்கோள், அளவற்ற ஊக்கம், 
தளர்வற்ற நெஞ்சுறுதி, சலியாத உழைப்பு 
இவைகளே வெற்றிக்கு வழிகள்.
-----------------------------------------------------------------------------------
எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் 
ஏமாற்றங்கள் அதிகமாக இருக்காது!
-----------------------------------------------------------------------------------
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது...
பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது!
-----------------------------------------------------------------------------------
வெற்றி என்பது நாம் பெற்றுக் கொள்வது, 
தோல்வி என்பது நாம் கற்றுக் கொள்வது!
-----------------------------------------------------------------------------------
செயல்கள் எதுவும் நல்லது அல்லது கெட்டது என்று இல்லை .
அதன் அடிப்படையான ஆசை தான் அதை நிர்ணயிக்கிறது.
ஒரு பெரிய தளபதி கூட தோற்க கூடும் .
பாமரன் விவசாயியின் வைராக்கியம் தோற்காது.
-----------------------------------------------------------------------------------
வாழ்வு காலத்தில் நன்மையை செய்...
தாழ்வு காலத்தில் சிந்தனையை செய்!
-----------------------------------------------------------------------------------
நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னைத் தேடிவரும்.
-----------------------------------------------------------------------------------
நல்ல நண்பனை அடைய விரும்பினால் 
நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------
செல்வங்களை விட செல்வாக்கு மேலானது.
-----------------------------------------------------------------------------------
கண்ணாடி வீட்டில் வசிப்பவன், 
அண்டை வீட்டார் மேல் கல் எறியக் கூடாது.
-----------------------------------------------------------------------------------
தொடக்கத்தைவிட முடிவைப் பற்றி அதிகமாக சிந்தனை செய்.
-----------------------------------------------------------------------------------
ஒரு மனிதனின் அழகு அவன் நாவின் இனிமையில் இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------
Sunday, 24 February 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment